பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : ஆஆஆஆஆ…..
ஆஆஆஆஆ…..
கண்மணியே நீ எங்கே
உன் விழியாய் நான் இங்கே
பார்வை உன்னை தேடுகின்றதே
பாதை எங்கும் போடுகின்றதே
பனி மலரே முழு நிலவே
பாடலோடு ராகம் சேர துடிக்கின்றதே
கண்மணியே நீ எங்கே…
ஆண் : மூணு ஜென்மமே நான் தேடும் பொன் வானமே
என் நெஞ்சமே நீ வாழும் வீடாகுமே
பெண் : ஆகாயமே என் வாழ்வின் ஆதாரமே
என் நெஞ்சமே நீயாளும் ராஜாங்கமே
ஆண் : தேவியின் குரல் என்னை அழைத்தது
திருமுக தரிசனம் கிடைத்தது
பெண் : தனிமையில் உயிரென துடித்தது
தலைவனை பார்த்ததும் சிரித்தது
ஆண் : ரதியிவள் உடலிங்கு ரகசியம் பேசிடுதோ
பெண் : கண்மணிதான் நான் இங்கே
என் விழியே நீ அங்கே
பார்வை உன்னை கண்டுக் கொண்டதே
காதல் இன்று ஒன்று சேர்ந்ததே
பனி மலரே முழு நிலவே
பாடலோடு ராகம் சேர துடிக்கிறதே
கண்மணிதான் நான் இங்கே….
பெண் : எந்தன் வாழ்வின் ஏற்றும் தீபமே உன்முகமே
எந்த நாளும் சொந்தமாகுமே என் மனமே
ஆண் : முல்லை பூவை வானம் தூவுமே
ஒரு வரமே மழை வருமே
எல்லை மீறி வெள்ளம் பாயுமே
இது சுகமே புது சுகமே
பெண் : உதகை மலையின் மேலே
ஆண் : உருகும் பனியை போலே
பெண் : இதயமும் உருகுது இன்பமும் பெருகுது
ஆண் : இளமையின் கதவுகள் திறந்தது இரவினிலே…