பாடகர்கள் : நரேஷ் ஐயர், ஸ்வேதா மோகன் மற்றும் ஹனுமான்
இசையமைப்பாளர் : எஸ். தமன்
ஆண் : கனவுல உசுர கனவுல உசுர
தொலவுற பேதை நான்தான்
நெனவுல அழகு நெருப்புல மெழுகா
வீசிட்டு போனேன் நான்தான்
ஆண் : நரிகள் துரத்த வழியில் துடிக்க
தூரத்தில் தொலைச்சேன் உன்னை
நொடிக்கொரு நிறத்த இன்னொரு முகத்த
காட்டுது காலம் முன்ன
ஆண் : இந்த வானம் உன்னை காட்டுமா
என் வார்த்தை அங்கு கேட்க்குமா
இது இன்று நாளை மாறுமா
இல்லை இன்னும் இன்னும் நீளுமா
ஆண் : கடவுள பாக்கணும்
பதில் என்ன கேட்க்கனும்
வழிய நான் வாங்கணும்
எனக்கு நீ வாழனும்
பெண் : உசுருல கனவா உசுருல கனவா
வெதச்சிட்டு இருந்தேன் நான்தான்
அழுகைய நிழலா அழுகைய நிழலா
படைச்சிட்டு போன நீதான்
பெண் : கருவுல கலைச்ச கொழந்தைய போல
தனியா துடிக்கிறேன் உள்ள
முகத்துல சிரிக்கும் அகத்துல வெறுக்கும்
உலகத்த புரியவே இல்ல
பெண் : கரை எந்தன் மீது பூசுதே
சிறைக்குள்ளே என்னை வீசுதே
பல கண்கள் பார்க்க கூசுதே
ஏதேதோ சொல்லி ஏசுதே
ஆண் : கடவுள பாக்கணும்
பதில் என்ன கேட்க்கனும்
எதுக்கு நான் சாகனும்
எதிர்த்துதான் போகணும்
ஆண் : ஆஅ……ஆஅ……ஆ…..ஆஅ……ஆ……
ஹா….ஆ…..ஆ…ஆ…..ஆ……