கனவே கனவே கலைந்து எங்கு போகிறாய்
கலங்கும் மனதை என்ன செய்ய போகிறாய்
சிறு மின்னல் காட்டும் வெளிச்சம்
அது தீபம் ஆகுமா
மழை தேடி வந்த மயில்கள்
இந்த இடியை தாங்குமா
கனவே கனவே கலைந்து எங்கு போகிறாய்
கலங்கும் மனதை என்ன செய்ய போகிறாய்
திரையோடு நின்றாடும் நிழல் கூத்து தான் வாழ்க்கை
தரையோடு தள்ளாடி விழுகின்றதோர் பொம்மை
திரையோடு நின்றாடும் நிழல் கூத்து தான் வாழ்க்கை
தரையோடு தள்ளாடி விழுகின்றதோர் பொம்மை
நீரோடும் ஓடை நீரின்றி ஓட
வெறும் கானல் நீரிலே
மனம் தூண்டில் போடுதே
இது முதலா முடிவா
யார் சொல்லுவார்
கனவே கனவே கலைந்து எங்கு போகிறாய்
கலங்கும் மனதை என்ன செய்ய போகிறாய்
காணாத காட்சி எல்லாம் வருகின்றதோர் நேரம்
கண்ணீரில் பிம்பங்கள் கரைகின்றதோர் நேரம்
காணாத காட்சி எல்லாம் வருகின்றதோர் நேரம்
கண்ணீரில் பிம்பங்கள் கரைகின்றதோர் நேரம்
காலங்கள் செய்யும் மாயங்கள் எல்லாம்
புரியாத வாழ்விலே
இருள் மூடும் போதிலே
உயிர் உருகும் உணர்வே
கலங்காதிரு
கனவே கனவே கலைந்து எங்கு போகிறாய்
கலங்கும் மனதை என்ன செய்ய போகிறாய்