பாடகர் : ஆதித்யன்
இசையமைப்பாளர் : ஆதித்யன்
ஆண் : காதல் என்பது காற்றைப் போன்றது
காற்றில்லாமலே எங்கே வாழ்வது
சொல் மனமே……ஏ……
சொல் மனமே……ஏ……
ஆண் : பொண்ணும் ஆணும் இல்லாமல்
பூமியில் சம்பவம் கிடையாது
மண்ணில் காதல் இல்லாமல்
பூவில் வாசம் கிடையாது
காதலர் செத்துப் போகக் கூடும்
காதல் சாகாது
ஆண் : மழை கெட்டுப் போனாலும்
கடல் வற்றிப் போகாது
அடி சுட்டுப் போடும் போதும்
காதல் பட்டுப் போகாது
ஆண் : ஓஒ…..ஓஒ…..ஓஒ…..ஓ…..
ஆண் : அந்தக் காலமும் இந்தக் காலமும்
காதலை வாழ்த்தவில்லை
அடி எந்தக் காலமும் வாழ்த்துவதாலே
காதலும் வாழ்வதில்லை
ஆண் : கத்திகள் தூக்குக் கயிறுகள் கூட
காதலை வீழ்த்தவில்லை
இந்தக் கட்டுக் காவலும் வேலியும்
நமது காதலை ஓய்ப்பதில்லை
ஆண் : காதல் என்பது காற்றைப் போன்றது
காற்றில்லாமலே எங்கே வாழ்வது
சொல் மனமே……ஏ……
சொல் மனமே……ஏ……
ஆண் : பொண்ணும் ஆணும் இல்லாமல்
பூமியில் சம்பவம் கிடையாது
மண்ணில் காதல் இல்லாமல்
பூவில் வாசம் கிடையாது
காதலர் செத்துப் போகக் கூடும்
காதல் சாகாது…..
ஆண் : மழை கெட்டுப் போனாலும்
கடல் வற்றிப் போகாது
அடி சுட்டுப் போடும் போதும்
காதல் பட்டுப் போகாது….
ஆண் : பச்சைக்கிளியின் சிறகில் வண்ணம்
பூசியது எப்படியோ
பரந்த வானில் நீல நிறங்கள்
பரவியது எப்படியோ
ஆண் : சலவை செய்தால் அந்த நிறங்கள்
சாயம் போவதில்லை
அட சத்தியம் செய்தேன் எங்கள் காதல்
சாயப் போவதில்லை…
ஆண் : காதல் என்பது காற்றைப் போன்றது
காற்றில்லாமலே எங்கே வாழ்வது
சொல் மனமே……ஏ……
சொல் மனமே……ஏ……
ஆண் : பொண்ணும் ஆணும் இல்லாமல்
பூமியில் சம்பவம் கிடையாது
மண்ணில் காதல் இல்லாமல்
பூவில் வாசம் கிடையாது
காதலர் செத்துப் போகக் கூடும்
காதல் சாகாது…..
ஆண் : மழை கெட்டுப் போனாலும்
கடல் வற்றிப் போகாது
அடி சுட்டுப் போடும் போதும்
காதல் பட்டுப் போகாது….