பாடகி : சுஜாதா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : காலையில கண் முழிச்சு
நான் சூரியனக் கண்டதில்ல
கண்டதெல்லாம் தாய் முகத்த
என் தாயப் போல யாரும் இல்ல
பெண் : தானாப் பொறந்ததாரு
இங்க தானா வளந்ததாரு…..
தொப்புள் கொடி அறுந்தா தீருமா
கூட ஒட்டி வந்த ஒறவும் மாறுமா
பெண் : காலையில கண் முழிச்சு
நான் சூரியனக் கண்டதில்ல
பெண் : கோழி முழிக்கும் முன்ன
கண்ண முழிச்சு
என்னச் சீராகப் பாத்ததாரு
பெண் : மாடா ஒழச்சு
பெரும் பாடாகப் பட்டு
வெறும் ஓடாகத் தேய்ஞ்சதாரு
பெண் : ஓ… சிறகு வரும் முன்னே
பறந்ததும் யாரு……
நெறஞ்ச அந்த மனச கலங்க வெச்சதாரு…..
பெண் : பக்கம் உள்ள சொந்தம்
வெகு தூரம் ஆனதென்ன
தூரம் ஆன சோகம்
என் சொந்தம் ஆனதென்ன
ஒத்தையில நான் ஒத்தையில
பெண் : காலையில கண் முழிச்சு
நான் சூரியனக் கண்டதில்ல
காலையில கண் முழிச்சு
பெண் : என் சோகம் சொல்லும்
சிறு சின்னக் குயிலு
அது கேக்காம போற ராசா…..
பெண் : தத்தளிக்கும்
இந்தத் தங்க மயிலுக்கு
வார்த்த ஒண்ணு சொல்லு ராசா…..
பெண் : ஓ… கனவில் ஒன் உருவம்
தெனமும் வந்து போகுதே
செண்பக வாசம் மனசெல்லாம் வேகுதே
பெண் : முல்லப் பூவு தோட்டம்
சிறு கள்ளி வேலி ஆச்சு
கள்ளியிலும் பூவு அது
கேலி சொல்லும் பேச்சு
கேக்கலியா ஹோய் கேக்கலியா
பெண் : காலையில கண் முழிச்சு
நான் சூரியனக் கண்டதில்ல
கண்டதெல்லாம் தாய் முகத்த
என் தாயப் போல யாரும் இல்ல
பெண் : தானாப் பொறந்ததாரு
இங்க தானா வளந்ததாரு…..
தொப்புள் கொடி அறுந்தா தீருமா
கூட ஒட்டி வந்த ஒறவும் மாறுமா
பெண் : காலையில கண் முழிச்சு
நான் சூரியனக் கண்டதில்ல
காலையில கண் முழிச்சு