பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன்
மற்றும் வாணி ஜெய்ராம்
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆஆ…ஹா…ஆஆ..
ஹா…ஆஆ….ஆஆ…..
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின்…. சுயம்வரமோ
கண்திறந்தால்…. சுகம் வருமோ
பெண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
ஆண் : பூங்குயில் சொன்னது
காதலின் மந்திரம்
பூமகள் காதினிலே
பெண் : பூவினைத் தூவிய
பாயினில் பெண்மனம்
பூத்திடும் வேளையிலே
ஆண் : நாயகன் கைத்தொடவும்
வந்த நாணத்தை பெண் விடவும்
நாயகன் கைத்தொடவும்
வந்த நாணத்தை பெண் விடவும்
பெண் : மஞ்சத்திலே கொஞ்ச கொஞ்ச
ஆண் : மங்கை உடல் கெஞ்ச கெஞ்ச
பெண் : சுகங்கள் சுவைக்கும்
இரண்டு விழிகளில்
பெண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின்…. சுயம்வரமோ
கண்திறந்தால்…. சுகம் வருமோ
ஆண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ..
பெண் : …………………………………….
பெண் : மாவிலைத்தோரணம்
ஆடிய காரணம்
தேவியின் திருமணமோ
ஆண் : ஆலிலையோ தொட
ஆளில்லையோ
அதில் ஆடிடும் என் மனமோ
பெண் : காதலின் பல்லவியோ
அதில் நான் அனுபல்லவியோ
காதலின் பல்லவியோ
அதில் நான் அனுபல்லவியோ
ஆண் : மஞ்சத்திலே ஏழு ஸ்வரம்
இன்பத்திலே நூறு வரம்
பெண் : மிதந்து மறந்து
மகிழ்ந்த நெஞ்சத்தில்
ஆண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
பெண் : கனவுகளின்…. சுயம்வரமோ
கண்திறந்தால்…. சுகம் வருமோ
ஆண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே…