பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே ஹோய்
அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹா
பெண் : இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே
அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹோய்….
ஆண் : ஹே…ஹே…ஹே…என்னென்ன……ஜாலங்கள்
என் கண்கள் காணாத கோலங்கள்
பெண் : ஓ…ஓ…ஓ……தர்மங்கள்……தாண்டுங்கள்……
நேரங்கள் எல்லாமே நியாயங்கள்
ஆண் : சுண்டு விரல்தான் பட்டது
இந்த மனசோ கெட்டது…….வா வா போதாது…..
பெண் : இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
ஆண் : ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே ஆஹான்
பெண் : அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹோய்….
பெண் : ஹே…ஹே…ஹே தாகங்கள்……தீராதோ
தேனாறு பாலாறாய் மாறாதோ
ஆண் : ஓ…ஓ…ஓ…பூமஞ்சம்……தேடாதோ
பெண் கூந்தல் பாயொன்று போடாதோ
பெண் : என்னை இழந்தேன் மன்மதா
இன்னும் உலகம் உள்ளதா வாழ்க்கை வாராதா…ஆ….
ஆண் : இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
பெண் : ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே ஹோய்
ஆண் : அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹா
ஆண் : {இது மார்கழி வேளை
பெண் : இது மார்கழி வேளை
ஆண் : இங்கு மன்மத லீலை
பெண் : இங்கு மன்மத லீலை} (2)