பாடகர்கள் : மின்மினி மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : சின்னச் சின்னப் பூங்கொடி
என்னைச் சுற்றிப் பாடுதே
சின்னச் சின்னப் பூங்கொடி
என்னைச் சுற்றிப் பாடுதே
பெண் : சின்னச் சின்னப் பூங்கொடி
என்னைச் சுற்றிப் பாடுதே
பெண் : கண்மணி பொன்மணி கண்ணே
நீ ஓ…..ஓ…..
அன்புச் சின்னம் தந்ததே
அள்ளித் தந்து நின்றதே
என் உயிர் உன்னிடம் கண்ணே ஓ…..ஓ….
விளையாடும் மானோ அலையோடும் மீனோ
மடி மீதில் வந்தே சேராதோ ஓ……
பெண்கள் : சின்னச் சின்னப் பூங்கொடி
என்னைச் சுற்றிப் பாடுதே
கண்மணி பொன்மணி கண்ணே
நீ ஓ…..ஓ…..
பெண் : கண் வண்ணமே
கண்டால் அது
பௌர்ணமியாய் காணும்
கை வண்ணமே கண்டால் அது
தாமரையாய் தோணும்
பெண் : பொன் இதழ் தந்தது
பூ இதழோ
புன்னகை சிந்திய மாந்தளிரோ
உன் குரல் தந்தது வேங்குழலா
உன் மனம் வானத்து கார்முகிலா
பெண் : அரும்புத் தோட்டம் போலே
அழகான வீச்சில்
குறும்புக் கேள்வி கேட்கும்
கரும்பு போல பேச்சில்
கவி பாடும் சின்னக் கண்ணம்மா ஆ…
பெண்கள் : சின்னச் சின்னப் பூங்கொடி
என்னைச் சுற்றிப் பாடுதே
கண்மணி பொன்மணி கண்ணே
நீ ஓ…..ஓ…..
அன்புச் சின்னம் தந்ததே
அள்ளித் தந்து நின்றதே
என் உயிர் உன்னிடம் கண்ணே ஓ…..ஓ….