பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
ஆண் : ஆஆஆஆ…..ஆஆஆஆ….ஆஆஆஆ….
என்னைப் பெத்தவளே பெரியவளே
உடுக்கை சத்தம் காதில் வாங்கி போட்டுக்க
அதில் உன் புகழை பாடுகிறேன் கேட்டுக்க
ஆண் : என்னைப் பெத்தவளே பெரியவளே
உடுக்கை சத்தம் காதில் வாங்கி போட்டுக்க
அதில் உன் புகழை பாடுகிறேன் கேட்டுக்க
ஆண் : நான் படைச்ச ஞானமெல்லாம் நீ கொடுத்த பிச்ச
என்ன நீதானே தமிழெடுத்து பாடும்படி வச்ச
நான் படைச்ச ஞானமெல்லாம் நீ கொடுத்த பிச்ச
என்ன நீதானே தமிழெடுத்து பாடும்படி வச்ச
ஆண் : ஆத்தா நீ ஆலமரம் நான் உனது விழுது
ஆத்தா நீ ஆலமரம் நான் உனது விழுது
உன் அடி நிழலில் குடியிருப்பேன்
பாதங்களை தொழுது
ஆண் : பெத்தவளே பெரியவளே
உடுக்கை சத்தம் காதில் வாங்கி போட்டுக்க
அதில் உன் புகழை பாடுகிறேன் கேட்டுக்க…
ஆண் : ஏழை வீட்டில் எரிவது நீ ஏத்தி வச்ச விளக்கு
என் ஏழு ஜென்ம புண்ணியம்தான் மகனானேன் உனக்கு
ஏழை வீட்டில் எரிவது நீ ஏத்தி வச்ச விளக்கு
என் ஏழு ஜென்ம புண்ணியம்தான் மகனானேன் உனக்கு
ஆண் : கூழு காய்ச்சி ஊத்தினாலும் குடிக்கிறவ நீதான்
கூழு காய்ச்சி ஊத்தினாலும் குடிக்கிறவ நீதான்
அந்த கூழ் குடிச்ச வாயாலே வாழ்த்துறவ நீதான்
அந்த கூழ் குடிச்ச வாயாலே வாழ்த்துறவ நீதான்
ஆண் : வட்ட வட்ட பொட்டு வச்சு மஞ்ச பூசி வருவே
நீ வளர்த்த புள்ள நான் விரும்பி கேட்டதெல்லாம் தருவே
வட்ட வட்ட பொட்டு வச்சு மஞ்ச பூசி வருவே
நீ வளர்த்த புள்ள நான் விரும்பி கேட்டதெல்லாம் தருவே
ஆண் : கால் மொளச்சு கை மொளச்சு நேரில் வந்த தெய்வம்
கால் மொளச்சு கை மொளச்சு நேரில் வந்த தெய்வம்
உன் கண் மலரும் கருணை தானே
மாடு மனை செல்வம்
ஆண் : பெத்தவளே பெரியவளே
உடுக்கை சத்தம் காதில் வாங்கி போட்டுக்க
அதில் உன் புகழை பாடுகிறேன் கேட்டுக்க
ஆண் : என்னைப் பெத்தவளே பெரியவளே
உடுக்கை சத்தம் காதில் வாங்கி போட்டுக்க
அதில் உன் புகழை பாடுகிறேன் கேட்டுக்க
பெத்தவளே……பெரியவளே……