பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி
ஆண் : சித்திரமே சொல்லடி
முத்தமிட்டால் என்னடி
ஆண் : சித்திரமே சொல்லடி
முத்தமிட்டால் என்னடி
சித்திரமே சொல்லடி
முத்தமிட்டால் என்னடி
நித்தம் நித்தம் தென்றல் உன்னை
தொட்டதில்லையோ
தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம்
பட்டதில்லையோ
ஆண் : சித்திரமே சொல்லடி
முத்தமிட்டால் என்னடி
பெண் : கன்னி இதழ் மீது
தென்றல் படும் போது
அதில் இல்லாத சுவை இருக்கும்
அந்த சுகம் வேறு
சொந்தம் கொள்ளும் போது
அதில் பொல்லாத பயம் இருக்கும்
பெண் : சித்திரமே நில்லடி
முத்தம் இல்லை சொல்லடி
ஆண் : நித்தம் நித்தம் தென்றல் உன்னை
தொட்டதில்லையோ
தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம்
பட்டதில்லையோ
ஆண் : சித்திரமே சொல்லடி
முத்தமிட்டால் என்னடி
ஆண் : மேனி என்னும் மேடை
மூடி நிற்கும் ஆடை
நானாக மாறவில்லையா
மேனி என்னும் மேடை
மூடி நிற்கும் ஆடை
நானாக மாறவில்லையா
பெண் : அது மாறி விட்டால்
இந்த மேனியிலே
ஒரு தேனாறு ஓடும் இல்லையா
ஆண் : இடை தானாக வாடும் இல்லையா
பெண் : சித்திரமே நில்லடி
முத்தம் இல்லை சொல்லடி
பெண் : பாலிருக்கும் கிண்ணம்
மேல் இருக்கும் வண்ணம்
நீ செய்த கோலம் இல்லையோ
பெண் : பாலிருக்கும் கிண்ணம்
மேல் இருக்கும் வண்ணம்
நீ செய்த கோலம் இல்லையோ
ஆண் : அந்தக் கோலம் எல்லாம்
இதழ் மீது வந்தால்
இன்பம் கோடான கோடி இல்லையோ
பெண் : அதைக் காணாமல் போவதில்லையோ
பெண் : சித்திரமே நில்லடி
முத்தம் இல்லை சொல்லடி
ஆண் : நித்தம் நித்தம் தென்றல் உன்னை
தொட்டதில்லையோ
தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம்
பட்டதில்லையோ
பெண் : ஆஅ……ஆ…..
ஆண் : சித்திரமே சொல்லடி
பெண் : முத்தம் இல்லை சொல்லடி