பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : செல்லப் பிள்ளை சரவணன்
திருச்செந்தூர் வாழும் சுந்தரன்
கோபத்தில் மனத்தாபத்தில்
குன்றம் ஏறி வந்தவன்
செல்லப் பிள்ளை சரவணன்
பெண் : செல்லப் பிள்ளை சரவணன்
திருச்செந்தூர் வாழும் சுந்தரன்
பெண் : ஊஞ்சலில் கொஞ்சம் ஆடுவான் பின்பு
ஊடலில் கொஞ்சம் ஆடுவான்
கூந்தலில் மலர் சூடியே அவன்
கூட நான் வர வேண்டுவான்
பெண் : மயங்கி நான்……
மெல்லத் தடை சொல்ல
சினம் கொள்வான்
ஆண் : செல்லப் பிள்ளை சரவணன்
திருச் செந்தூர் வாழும் சுந்தரன்
வள்ளியை இன்பவல்லியை
அள்ளிக் கொண்ட மன்னவன்
பெண் : செல்லப் பிள்ளை சரவணன்
திருச்செந்தூர் வாழும் சுந்தரன்
ஆண் : மாலையில் ஒரு மல்லிகை என
மலர்ந்தவள் இந்தக் கன்னிகை
மன்மதன் கணை ஐவகை அதில்
ஓர் வகை இவள் புன்னகை
ஆண் : மடியில் நான்……..
துயில இடை துவள
கலை பயில
பெண் : செல்லப் பிள்ளை சரவணன்
திருச்செந்தூர் வாழும் சுந்தரன்
பெண் : கார்க்குழல் உந்தன் பஞ்சணை
இரு கைகளே உந்தன் தலையணை
ஆண் : வேலவன் கொஞ்சும் புள்ளி மான்
அதன் வடிவம் தான்
இந்த வள்ளி மான்
பெண் : அருகில் நான்…..
அருகில் நான் வந்தேன்..
இதழ்ச் செந்தேன் இதோ தந்தேன்
ஆண் மற்றும் பெண் :
செல்லப் பிள்ளை சரவணன்
திருச்செந்தூர் வாழும் சுந்தரன்