பாடகி : பி. சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர்க் காதலில் ஓர் கவிதை
பெண் : அன்புள்ள
மன்னவனே ஆசையில்
ஓர் கடிதம் அதைக் கைகளில்
எழுதவில்லை இரு கண்களில்
எழுதி வந்தேன்
ஆண் : { நலம் நலம்தானா
முல்லை மலரே சுகம்
சுகம்தானா முத்து சுடரே } (2)
ஆண் : இளைய கன்னியின்
இடை மெலிந்ததோ எடுத்த
எடுப்பிலே நடை தளர்ந்ததோ
ஆண் : வண்ணப் பூங்கொடி
வடிவம் கொண்டதோ வாடைக்
காற்றிலே வாடி நின்றதோ
ஆண் : அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர்க் காதலில் ஓர் கவிதை
பெண் : { நலம் நலம்தானே
நீ இருந்தால் சுகம் சுகம்
தானே நினைவிருந்தால் } (2)
பெண் : இடை மெலிந்தது
இயற்கையல்லவா நடை
தளர்ந்தது நாணம் அல்லவா
பெண் : வண்ணப் பூங்கொடி
பெண்மை அல்லவா வாட
வைத்ததும் உண்மை அல்லவா
பெண் : அன்புள்ள
மன்னவனே ஆசையில்
ஓர் கடிதம் அதைக் கைகளில்
எழுதவில்லை இரு கண்களில்
எழுதி வந்தேன்
ஆண் : அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர்க் காதலில் ஓர் கவிதை
பெண் : உனக்கு ஒரு பாடம்
சொல்ல வந்தேன் எனக்கு
ஒரு பாடம் கேட்டு கொண்டேன்
ஆண் : பருவம் என்பதே
பாடம் அல்லவா பாவை
என்பதே பள்ளி அல்லவா
ஆண் & பெண் : ஒருவர்
சொல்லவும் ஒருவர்
கேட்கவும் இரவும் வந்தது
நிலவும் வந்தது
ஆண் : அன்புள்ள மான்விழியே
பெண் : ஆசையில் ஓர் கடிதம்
ஆண் : அதை கைகளில் எழுதவில்லை
பெண் : இரு கண்களில் எழுதி வந்தேன்