பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : தென்னம்
இளங்கீற்றினிலே…..ஏ…..ஏ….ஏ….
{தென்னம் இளங்கீற்றினிலே
தாலாட்டும் தென்றல் அது} (2)
ஆண் : {தென்னைதனைச்
சாய்த்துவிடும் புயலாக
வரும்பொழுது}(2)
ஆண் : அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
ஆண் : காற்றினிலும்
மழையினிலும் கலங்க
வைக்கும் இடியினிலும்
ஆண் : காற்றினிலும்
மழையினிலும் கலங்க
வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி
நின்றால் வாழும் ஹோய்
ஹோய்
ஆண் : அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
பெண் : ஓஒ…..ஓஓ……ஓஒ….
ஓஒ…..ஓஒ…..ஓஒ…..
பெண் : அமைதியான
நதியினிலே நதியினிலே
நதியினிலே ஓடும்
பெண் : நாணலிலே
காலெடுத்து நடந்து
வந்த பெண்மை இது
பெண் : நாணம் என்னும்
தென்றலிலே தொட்டில்
கட்டும் மென்மை இது
பெண் : அந்தியில்
மயங்கி விழும்
காலையில் தெளிந்து
விடும்
பெண் : அன்பு மொழி
கேட்டுவிட்டால் துன்ப
நிலை மாறிவிடும்
பெண் : அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
பெண் : காற்றினிலும்
மழையினிலும் கலங்க
வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி
நின்றால் வாழும் ஹோய்
ஹோய்
பெண் : அமைதியான
நதியினிலே ஓடும்