பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : அடி வான்மதி
என் பார்வதி காதலி
கண் பாரடி
ஆண் : அடி வான்மதி
என் பார்வதி காதலி
கண் பாரடி தேடி வந்த
தேவதாசை காண ஓடிவா
அடி பார்வதி என் பார்வதி
ஆண் : பாரு பாரு
என்றேன் பார்த்தால்
ஆகாதா பாடும் பாடல்
அங்கே கேட்காதா
ஆண் : அடி வான்மதி
என் பார்வதி
ஆண் : சின்ன ரோஜா
இதழ் அது கன்னம் நான்
என்றது
பெண் : பாடும் புல்லாங்குழல்
உன் பாஷை நான் என்று
கூறும்
ஆண் : கூந்தல் அல்ல
தொங்கும் தோட்டம்
தோளில் சாய்ந்தால்
ஊஞ்சல் ஆட்டும்
பெண் : தேன் தர
வேண்டும்நீ வர
வேண்டும் கண்வாசல்
பார்த்தாடு வா ஆஆ…
பெண் : ஒரு வான்மதி
உன் பார்வதி காதலி
என்னை காதலி தேவன்
எந்தன் தேவதாசை
காண ஏங்கினேன்
என் தேவதாஸ்
என் தேவதாஸ்
பெண் : பாரு பாரு
என்னும் பாடல்
கேட்டேனே பாரு
நானும் உன்னை
பார்த்தேனே
பெண் : ஒரு வான்மதி
உன் பார்வதி
பெண் : கோடை
காலங்களில் குளிர்
காற்று நீயாகிறாய்
ஆண் : வாடை
நேரங்களில் ஒரு
போர்வை நீயாக
வந்தாய்
பெண் : கண்கள் நாலும்
பேசும் நேரம் நானும் நீயும்
ஊமை ஆனோம்
ஆண் : மைவிழி
ஆசை கைவளையோசை
என்னென்று நான் சொல்லவா
ஆண் : அடி வான்மதி
என் பார்வதி காதலி
கண் பாரடி தேடி வந்த
தேவதாசை காண ஓடிவா
பெண் : என் தேவதாஸ்
என் தேவதாஸ்
பெண் : பாரு பாரு
என்னும் பாடல்
கேட்டேனே பாரு
நானும் உன்னை
பார்த்தேனே
ஆண் : அடி வான்மதி
என் பார்வதி
பெண் : தேவதாஸ்
என் தேவதாஸ்