பாடகர்கள் : எஸ். பி. சைலஜா, மலேசியா வாசுதேவன் மற்றும் ஜென்சி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஅ….ஆ….ஆ…ஆ….ஆ…..ஆ….ஆ…
ஹா….ஆஅ….ஹா…..ஆஅ….ஹா….ஆஅ…..
பெண் : ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ
நெருங்கி வந்து சொல்லுங்கள்…..சொல்லுங்கள்….
பெண் : ஆயிரம் மலர்களே மலருங்கள்
பெண் : வானிலே வெண்ணிலா
தேய்ந்து தேய்ந்து வளரலாம்
வானிலே வெண்ணிலா
தேய்ந்து தேய்ந்து வளரலாம்
மனதில் உள்ள கவிதை கோடு மாறுமோ….
ராகங்கள் நூறு பாவங்கள் நூறு
என் பாட்டும் உன் பாட்டும் பொன் அல்லவோ
பெண் : ஆயிரம் மலர்களே மலருங்கள்
பெண் : கோடையில் மழை வரும்
வசந்தக் காலம் மாறலாம்
எழுதிச் செல்லும்
விதியின் கைகள் மாறுமோ
காலதேவன் சொல்லும்
பூர்வ ஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ
யார் சேர்த்ததோ
பெண் : ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ
நெருங்கி வந்து சொல்லுங்கள்…..சொல்லுங்கள்….
ஆண் : பூமியில் மேகங்கள்
ஓடியாடும் யோகமே
மலையின் மீது
ரதி உலாவும் நேரமே
சாயாத குன்றும்
காணாத நெஞ்சும்
தாலாட்டு பாடாமல் தாயாகுமோ
பெண் : ஆ…ஆ…ஆ…
பெண் : ஆயிரம்
ஆண் : மலர்களே
இருவர் : மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ
நெருங்கி வந்து சொல்லுங்கள்…..சொல்லுங்கள்….
ஆயிரம் மலர்களே மலருங்கள்