ஆனாலும் இந்த மயக்கம்
ஆகாது நெஞ்சே உனக்கு
போனாலும் நின்னு சிரிக்கும்
போகாது இந்த கிறுக்கு
எனக்கு புடிச்ச அது மாறி
உலகம் கெடக்கு அழகேறி
முன்னால.. ஒ…
தர ரா தாராரரா....
(அவளா சொல்லும் முன்ன மனமே ஏன் துள்ளுற)
ஆனாலும் இந்த மயக்கம்
ஆகாது நெஞ்சே உனக்கு
போனாலும் நின்னு சிரிக்கும்
போகாது இந்த கிறுக்கு
அருகாமையில் இருப்பேன்
அடடா என வியப்பேன்
நீ சொன்னாலும் சொல்லாம நின்னாலும்
தினமும் நல்ல சகுனம்
புதுசா ஒரு பயணம்
இந்த பாதையில் ஊர் சேரனும்
தலைய கோதி நானும் பார்த்தேன்
தனிமை எல்லாம் தின்னு தீக்க வந்தாயே.. ஓ..
தர ரா தாராரரா...
(அவளா சொல்லும் முன்ன மனமே ஏன் துள்ளுற)
ஆனாலும் இந்த மயக்கம்
ஆகாது நெஞ்சே உனக்கு
சிரிக்கும் போதே முறைப்ப மழைக்குள் வெயில் அடிப்ப
நான் போனாலும் போகாத சொல்லிட்டேன்
முடியும் என நெனச்சா தொடரும் என முடிப்பேன்
நீ மாறாத நான் மாறிட்டேன்
நிலவுக்குள்ள இல்ல நீரு
நீரில் தூங்கும் நிலவ பாரு
ஆனாலும் இந்த மயக்கம்
ஆகாது நெஞ்சே உனக்கு
போனாலும் நின்னு சிரிக்கும்
போகாது இந்த கிறுக்கு
எனக்கு புடிச்ச அது மாறி
உலகம் கெடக்கு அழகேறி
முன்னால.. ஒ…
தர ரா தாராரரா....
அவளா சொல்லும் முன்ன மனமே ஏன் துள்ளுற