திருக்குறள் - அதிகாரம் காலமறிதல்
-
Showing 1 - 10 of 10
-
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது. -
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு. -
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறந்து செயின். -
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின். -
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர். -
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து. -
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். -
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை. -
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல். -
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.