திருக்குறள் - அதிகாரம் நல்குரவு
-
Showing 1 - 10 of 10
-
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது. -
இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும். -
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை. -
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும். -
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும். -
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும். -
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும். -
இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு. -
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது. -
துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.